விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையை அடுத்த ஆவடியில் விமானப்படை வீரர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். மயிலாடுதுறையை சேர்ந்த காளிதாஸ் என்பவர், ஆவடி விமானப்படை பயிற்சி மையத்தில் பாதுகாப்பு அலுவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், பணியில் ஈடுபட்டிருந்த அவர், திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார். இதில், அவரது தொண்டை பகுதியில் 3 தோட்டாக்கள் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த முத்தாபுதுபேட்டை போலீசார், காளிதாஸ் தற்கொலைக்கு பணி சுமையா? அல்லது சொந்த பிரச்சனை காரணமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day