விருதுநகர் அருகே பட்டாசு விபத்து - 4 பேர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.


விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த சகாதேவன் என்பவர், பந்துவார்பட்டி பகுதியில் புளு ஸ்டார் என்ற பெயரில் பட்டாசு ஆலையை நடத்தி வருகிறார். இந்த பட்டாசு ஆலையில் சுமார் 15க்கும் மேற்பட்ட அறைகளில் 50க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று நடைபெற்று வந்த இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை திடீர் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

3 அறைகள் முழுமையாக சேதமடைந்துள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் காவல்துறையினர், வருவாய்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த நபர்களில் ஒருவரின் பெயர், அடையாளம் தெரிய வந்த நிலையில், உயிரிழந்தவர் அச்சங்குளத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும், 3 பேர் உடல்களை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Night
Day