விருதுநகர் : தரைப்பாலத்தில் கார் மோதி தீப்பிடித்து எரிந்ததில் கார் ஓட்டுநர் உடல் கருகி பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் அருகே தரைப்பாலத்தில் கார் மோதி தீப்பிடித்து எரிந்ததில் கார் ஓட்டுநர் உடல் கருகி பலியானார். மேலப்பொன்னாகரம் பகுதியை சேர்ந்த சசிக்குமார் என்பவர், தனது மகனுடன் காரில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். துலுக்கப்பட்டி விலக்கில் சென்றபோது தரைப்பாலத்தில் மோதிய கார் பள்ளத்தில் உருண்டோடி தீப்பற்றி எரிந்தது. இதில் காரை ஓட்டி சென்ற நபர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். தகவலறிந்து சென்ற போலீசார் படுகாயமடைந்த இருவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day