விருதுநகர்: கூடுதல் பேருந்துகள் இயக்கக்கோரி அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூடுதல் பேருந்துகளை இயக்க கோரி அரசு கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். பிள்ளையார்குளம் அட்டை மில் அருகே புதியதாக கட்டப்பட்ட அரசு கலைக் கல்லூரியில் ஏரளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். தினம் தோறும் கல்லூரி நேரத்திற்கு ஒரு பேருந்து மட்டும் இயக்கப்படுவதாக கல்லூரி மாணவா்கள் குற்றம்சாட்டி வந்தனா். இந்த நிலையில் வழக்கம் போல் அரசு பேருந்தில் பயணம் செய்த போது, கூட்ட நெரிசல் காரணமாக பேருந்து ஓட்டுனரும், நடத்துனரும் மாணவர்களை பாதி வழியில் இறக்கி விட்டு சென்றுள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினா்.

Night
Day