விருதுநகர்: மதுக்‍கடை அமைக்‍க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்‍கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில், மீண்டும் அரசு மதுபான கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். வத்திராயிருப்பு பகுதியில், ஏற்கனவே டாஸ்மாக்‍ கடை செயல்பட்டு வந்த நிலையில், பொதுமக்‍கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து மதுக்‍கடை மூடப்பட்டது. இந்நிலையில், அங்கு மீண்டும் மதுபானக்கடை திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானதால் பொதுமக்‍கள் ஆத்திரமடைந்தனர். இப்பகுதியில் டாஸ்மாக்‍ கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Night
Day