விருதுநகர்: வட்டாட்சியர் அலுவலகத்தில் 36 கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரை கண்டித்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் 36 கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நத்தம் புறம்போக்‍கு இடத்தில் சமுதாயக்‍கூடம் கட்ட முயன்றவர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ராமதாஸ், கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டனை வலியுறுத்தியுள்ளார். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால், மணிகண்டன் புகார் அளிக்‍க மறுத்துள்ளார். இந்நிலையில் மணிகண்டனுக்‍கு, விளக்‍கம் கேட்டு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இதனை ரத்து செய்யக்‍கோரி ராஜபாளையத்தில் பணியாற்றும் 36 கிராம நிர்வாக அலுவலர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Night
Day