தமிழகம்
3 கிமீ தூரம் ஓடி உயிர் தப்பினோம் - தாக்குதலில் தப்பிய தமிழர்கள் பேட்டி...
பஹல்காம் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து தப்பிய விழு?...
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். கிருஷ்ணாபுரம் ஊரணிப்பட்டி தெருவில் கடந்த 5 ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், தெருவிளக்கு, சாலை, சுகாதாரம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து மனு அளித்தும் கிருஷ்ணாபுரம் ஊராட்சி தலைவர் நித்யா விஜயகுமார் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்டோர் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய சுமூக பேச்சுவார்த்தையை அடுத்து கலைந்து சென்றனர்.
பஹல்காம் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து தப்பிய விழு?...
பாகிஸ்தானியர்களுக்கு வழங்கிய அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படுவதாக ?...