விளம்பர திமுக ஆட்சியில் எந்தவொரு திட்டமும் உருப்படியாக இல்லை - புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

கருங்குளம் பகுதியில் பெருமளவில் திரண்டிருந்த கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்‍களிடையே எழுச்சியுரை ஆற்றிய கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், முறையாக கிடைப்பதில்லை என்று பொதுமக்‍கள் தொடர்ந்து புகார் தெரிவிப்பதாக குறிப்பிட்டார். 

புரட்சித்தாய் சின்னம்மா, திரளான மக்‍களிடையே உரையாற்றிய பின்னர், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் அவரை சந்தித்து பொன்னாடைகள் அணிவித்தனர். அப்பகுதியில் உள்ள பொதுமக்‍கள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் குறித்து புரட்சித்தாய் சின்னம்மாவிடம் விளக்‍கமாக எடுத்துரைத்தனர். 

கருங்குளம் பகுதி பொதுமக்‍கள் பிரச்சனைகள் குறித்து விவரமாக கேட்டறிந்த புரட்சித்தாய் சின்னம்மா அதுபற்றி குறிப்பு எடுத்துக்‍ கொண்டார். 


2026 ஆம் ஆண்டு புரட்சித்தலைவி அம்மா ஆட்சி அமைந்த உடன் மக்களின் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என புரட்சித்தாய் சின்னம்மா உறுதி அளித்தார்.


Night
Day