விழுப்புரம் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளுடன் குவிந்த விவசாயிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு ஒரே நாளில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொண்டுவரப்பட்டதால் இடவசதியின்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர். செஞ்சி அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பொன்னி நெல் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. தொடர் விடுமுறைக்கு பின் விற்பனை கூடம் திறக்கப்பட்டதால், ஒரே நாளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான நெல்மூட்டைகளுடன் விவசாயிகள் குவிந்தனர். இந்நிலையில் நெல் மூட்டைகளை இறக்கி வைக்க இடவசதி இல்லாததால் வாகனங்களிலேயே வைக்கும் நிலை ஏற்பட்டதாக வேதனை தெரிவித்த விவசாயிகள், கூடுதல் இட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Night
Day