விழுப்புரம்: அரசுப்பேருந்தில் தொங்கியபடி பயணித்த கல்லூரி மாணவன் விபத்தில் சிக்கிய பரிதாபம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அரசுப்பேருந்தின் படியில் தொங்கியபடி பயணித்த கல்லூரி மாணவன் தவறி விழுந்து படுகாயமடைந்தார். நல்லாளம் பகுதியை சேர்ந்த சுரேந்தர் என்பவர், தனியார் கல்லூரியில் படித்து வந்தார். வழக்கம்போல் கல்லூரிக்கு புறப்பட்ட மாணவர் அரசுப்பேருந்தில் கூட்டமாக இருந்ததால் படியில் தொங்கியபடி பயணித்துள்ளார். மரக்காணம் சாலையில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்த சுரேந்தருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

Night
Day