விழுப்புரம்: ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கிய அரசு பேருந்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற அரசு விரைவு பேருந்து எதிர் சாலையில் இருந்த தடுப்பை தாண்டி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தஞ்சையில் இருந்து 30 பயணிகளுடன் புறப்பட்ட அரசுப்பேருந்து திண்டிவனம் நோக்கி சென்று கொண்டிருந்தது. கருணாவூர்பேட்டை அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் நடுவே உள்ள தடுப்பு கட்டையில் மோதியது. தொடர்ந்து எதிர் சாலையில் பாய்ந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக லேசாய காயத்துடன் உயிர் தப்பினர்.

Night
Day