விழுப்புரம்: கூலி உயர்வு கோரி சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல் செய்யப்படாததை கண்டித்து விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகளை ஏற்றி இறக்கும் தனியார் சுமை தூக்கும் கூலித் தொழிலாளர்கள் கூலியை உயர்த்தி தர கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் வியாபாரிகள் தரப்பில் கூலி உயர்வுக்கு மறுப்பு தெரிவித்ததால் சுமை தூக்கும் தொழிலாளர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் தாங்கள் எடுத்து வந்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் வேதனையடைந்த விவசாயிகள் உடனடியாக நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யவேண்டுமென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Night
Day