விழுப்புரம்: ஜானகிபுரம் ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டதற்கு எதிர்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் ஜானகிபுரம் ரயில் கேட் நிரந்தரமாக மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டிய கிராமமக்கள், வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர். ஜானகிபுரம் பகுதியில் இருந்து கண்டமானடி கிராமத்திற்கு செல்லும் சாலையின் குறுக்கே உள்ள ரயில்வே கேட் கடந்த சில நாட்களுக்கு நிரந்தரமாக மூடப்பட்டது. இதனால் ஜானகிபுரம் வழியே செல்லக்கூடிய வாகனங்கள் சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டிய கிராம மக்கள், வரும் நாடாளுமன்ற தேர்தலையும் புறக்கணிக்க போவதாக அறிவித்தனர். 

Night
Day