விழுப்புரம்: திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் அருகே பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். மதுராந்தகத்தை சேர்ந்த விஜய் என்பவர் கிராம புறங்களில் நாடகம் நடித்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவர் அச்சரப்பாக்கம் பகுதியில் மயான கொள்ளை விழாவிற்கு நடிக்கச் சென்ற போது இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரம்யா என்பவருக்கு காதல் மலர்ந்தது. இந்த விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவரவே வேறு ஒரு நபரோடு ரம்யாவுக்கு திருமணம் ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் வேதனை அடைந்த ரம்யா, வீட்டை விட்டு வெளியேறி விஜயை திருமணம் செய்து கொண்டு ரோசனை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

Night
Day