விழுப்புரம்: முதலமைச்சர் பிறந்தநாளுக்காக வைக்கப்பட்ட பேனர்களால் உயிர்பலி ஏற்படும் அபாயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளுக்காக வைக்கப்பட்ட பேனர்களால் பொதுமக்கள் அவதியுற்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, திண்டிவனம் திமுக நகர மன்றம் சார்பில் நிர்வாகிகளும் தொண்டர்களும் அவருக்‍கு வாழ்த்து தெரிவிக்‍கும் வகையில் நகர் பகுதி முழுவதும் பேனர்களும், திமுக கொடிகளும் கட்டப்பட்டுள்ளன. நல உதவிகளை வழங்க வரும் அமைச்சர் செஞ்சி மஸ்தானை வரவேற்கும் வகையில் சாலையின் இருபுறமும் திமுக கொடி கட்டப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி திமுகவினர் போக்‍குவரத்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைத்துள்ளதாக பொதுமக்‍கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Night
Day