விழுப்புரம்: ரேஷன் கடையில் வெளிநாட்டு பாமாயில் விநியோகிக்க எதிர்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் தீவனூரில் நியாய விலைக்கடையில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். நியாய விலைக் கடைகளில் இந்தோனேசியா, மலேசியா பாமாயிலுக்கு மானியம் கொடுத்து விற்பனை செய்வதை ரத்து செய்து, தமிழ்நாட்டில் விளையும் தேங்காய், நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வகைகளை மானிய விலையில் விற்பனை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். திண்டிவனம் - திருவண்ணாமலை சாலையில் அமர்ந்து திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தங்கள் கையில் வைத்திருந்த பாமாயில் எண்ணெயை தரையில் கொட்டி அரசின் கவனத்தை ஈர்க்க முழக்கங்களை எழுப்பினர். சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். 

varient
Night
Day