விஷச்சாராயத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம், பலி எண்ணிக்கை 54-ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம், பலி எண்ணிக்கை 54-ஆக உயர்ந்துள்ள நிலையில், மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 30 பேர் உயிரிழந்த நிலையில், 90 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் பலியானதை அடுத்து 17 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 17 பேர் உயிரிழந்த நிலையில், 30 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 2 பேர் சிகிச்சை பலனின்றி பலியானதை அடுத்து, 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 140 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Night
Day