வீடுகளுக்குள் புகுந்து உணவு மற்றும் தின்பண்டங்களை எடுத்து செல்லும் குரங்குகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி பகுதியில் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலக்காவேரி சர்வமானிய தெருவில் கடந்த சில நாட்களாக கூட்டம் கூட்டமாக குரங்குகள் அட்டகாசம் செய்து வருகிறது. உணவுகளை தேடி வீட்டிற்குள் நுழையும் குரங்குகள் சமைத்த உணவுகள் மற்றும் தின்பண்டங்களை எடுத்து செல்வதுடன் பொருட்களையும் சேதப்படுத்துகிறது. மேலும் குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் வசிக்க வேண்டி சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வனத்துறை உரிய நடவடிக்கை எடுத்து கூண்டு வைத்து குரங்குகளை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day