வீரபத்திர கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கைப்பந்து போட்டி - இளைஞர்களை கோயில் நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பத்தூர் அடுத்த பாரண்டப்பள்ளி வீரபத்திர சுவாமி ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில், கைப்பந்து போட்டி நடத்திய இளைஞர்களை கோயில் நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.    திருப்பத்தூர் மாவட்டம், பாரண்டப்பள்ளியில் வீரபத்திர சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வீரபத்திர சுவாமி ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில் ஒன்றுகூடி கைப்பந்து போட்டி வைத்துள்ளதாக தெரிகிறது. இதை அறிந்த கோயில் நிர்வாகத்தினர், இளைஞர்களை தடுத்து நிறுத்தி காவல் துறையிடம் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் மற்றும் போலீசாரிடம், இளைஞர்களும், ஊர் மக்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Night
Day