வெல்டிங் வேலை செய்தபோது நேரிட்ட விபரீதம்!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை வானகரம் அருகே வெல்டிங் வேலை செய்யும் போது 5 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள கோவிந்தாபுரம் கரவான்படி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீ ராமலு. இவர் சென்னை வானகரம் பகுதியில் மெட்டல் ஷீட் போடும் பணியை செய்து வந்தார். அப்போது 5 அடி உயரத்திலிருந்து எதிர்பாராத விதமாக அவர் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் படுகாயம் அடைந்த ஸ்ரீராமலுவை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனை கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் ஸ்ரீராமனுவை சோதித்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஸ்ரீ ராமலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Night
Day