வேதாரண்யம் கடற்பகுதியில் 'சாகர் கவாஜ் ஆபரேஷன்' ஒத்திகை நிகழ்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்பகுதியில் 'சாகர் கவாஜ் ஆபரேஷன்' ஒத்திகை நிகழ்ச்சி தொடங்கியது. கடற்பகுதி வழியாக தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடிக்க ஆண்டுக்கு இருமுறை சாகர்கவஜ் ஆபரேஷன் என்ற கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கடலோர காவல் குழும காவல்துறையினர் இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபடுகின்றனர். அதன்படி, இந்த ஆண்டிற்கான சாகர் கவாஜ் ஆபரேஷன் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி ஆறுகாட்டுத்துறையில் இன்று தொடங்கியது. நாளை மாலை 6 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியை முன்னிட்டு, வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம் கடற்பகுதியில் கடலோர பாதுக்காப்பு போலீசார் படகில் சென்று தீவிரவாத தடுப்பு நடவடிக்கை ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.


Night
Day