வேலூர்: அரசுப்பேருந்தின் படியில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் அரசுப்பேருந்தின் படியில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் படுகாயமடைந்தார். புலிமேடு கிராமத்தை ஆகாஷ் என்ற 11ம் வகுப்பு மாணவன், அணைக்கட்டில் உள்ள அரசுப்பள்ளியில் படித்து வருகிறார். இவர் வழக்கம் போல் அரசுப்பேருந்தில் பள்ளிக்கு சென்றுள்ளார். அணைக்கட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்றபோது, பேருந்தின் படியில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் காலில் படுகாயமடைந்த மாணவனை பொதுமக்கள் மீட்டு அணைக்கட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். போதுமான அளவு பேருந்துகள் இயக்காததே விபத்திற்கு காரணம் என பெற்றோர்கள் குற்றம் சாட்டினர்.

Night
Day