வேலூர்: கண்டெய்னர் லாரி மீது பிக்கப் வேன் மோதி விபத்து - ஒருவர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பிக்கப் வேன் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னையில் இருந்து வீட்டு உபயோக பொருட்களை ஏற்றி சென்ற பிக்கப் வேனில் கரூரை சேர்ந்த ரவிசங்கர் என்பவர் கிளீனராக சென்றுள்ளார். பச்சூர் டோல்கேட் அருகே சென்றபோது தூக்க கலக்கத்தில் இருந்த ஓட்டுநர் எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்ற லாரி மீது பிக்கப் வேனை மோதியுள்ளார். இதில், கிளீனர் ரவிசங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day