வேலூர்: மக்கள் தங்கள் மனுக்களை செலுத்த ஆட்சியர் அலுவலகத்தில் பெட்டி வைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வேலூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு  முகாம் ரத்து செய்யப்பட்டது. நேற்று முன்தினம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்வு முகாம் ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக செலுத்த பெட்டி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்த பிறகு மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Night
Day