வேலூர்: மூதாட்டி இறங்கும் முன்பே பேருந்தை இயக்கிய ஓட்டுநர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வேலூர் அருகே அரசுப்பேருந்தில் சென்ற மூதாட்டி இறங்குவதற்கு முன்பே ஓட்டுநர் பேருந்தை இயக்கியதால், அவர் நிலை தடுமாறி விழுந்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. வேலூர் - ஆரணி சாலையில் சென்ற அரசுப்பேருந்து ஓட்டேரி பேருந்து நிறுத்தத்தில் நின்றுள்ளது. அதில் இருந்து மூதாட்டி இறங்கியபோது, அதிகப்படியான கல்லூரி மாணவர்கள் பேருந்தில் ஏறியுள்ளனர். மூதாட்டி நகர்ந்து வரும் முன்பே ஓட்டுநர் பேருந்தை எடுத்ததால், கூட்டத்தில் சிக்கிய அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அரசுப்பேருந்து ஓட்டுநர்களின் அலட்சியத்தால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Night
Day