வைகையாறு மாசுபடுவதை கட்டுப்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் தவறிவிட்டது - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வைகை ஆறு மாசுபடுவதை கட்டுப்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் தவறிவிட்டதாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. 

வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பது குறித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வைகை ஆறு மாசுபடுவதை கட்டுப்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் தவறிவிட்டதாக தெரிவித்த நீதிபதிகள், வைகை ஆற்றை பாதுகாக்க மாநில அரசு திட்ட அறிக்கையை தயாரித்து ஏன் மத்திய அரசிடம் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர். அவ்வாறு திட்ட அறிக்கை கொடுத்திருந்தால் அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட தயாராக உள்ளதாக தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.

Night
Day