ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரிக்கை - லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி பரமத்தி வேலூர் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநில லாரி ஓட்டுநர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை கண்டித்து பரமத்தி வேலூர் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசே ஆலையின் செயல்பாடுகளை கண்காணிக்க நிபுணர் குழுவைஅமைத்து ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Night
Day