ஸ்ரீதேவி நல்ல முத்து அம்மன் திருக்கோவிலில் புரட்சித்தாய் சின்னம்மா சாமி தரிசனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

பாளையங்கோட்டை ஒன்றியம் திருமலை கொழுந்துபுரம் பகுதியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்‍காக வருகை தந்த கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கழகக் கொடி ஏந்தி உற்சாக வரவேற்பு அளித்தனர். புரட்சித்தாய் சின்னமாவுக்‍கு பெண்கள், குலவை இட்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர். 

திருமலை கொழுந்துபுரத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனார் ஆகியோரின் திருவுருவப்படங்களுக்‍கு புரட்சித்தாய் சின்னம்மா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

திருமலை கொழுந்துபுரம் கிராமத்தில் சாலைகளில் திரண்டு நின்ற பெண்கள், புரட்சித்தாய் சின்னம்மாவை, வாகனத்தில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். கொட்டும் மழையிலும் நனைந்தபடி, கழகக்‍ கொடிகளை கரங்களில் ஏந்தியவாறு, புரட்சித்தாய் சின்னம்மாவை பெண்கள் எழுச்சியுடன் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி நல்ல முத்து அம்மன் திருக்கோவிலில் புரட்சித்தாய் சின்னம்மா சுவாமி தரிசனம் செய்தார். நல்லமுத்து அம்மன் திருக்கோவிலில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍காக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அம்மன் திருவடிகளில் வைக்‍கப்பட்ட மலர் மாலைகள் சின்னம்மாவிடம் வழங்கப்பட்டன. மேலும் பூஜிக்‍கப்பட்ட பிரசாதங்கள் சின்னம்மாவிடம் வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து திருமலை கொழுந்துபுரத்தில் பெருமளவில் திரண்டிருந்த பொதுமக்‍கள் மற்றும் கழகத் தொண்டர்களிடையே புரட்சித்தாய் சின்னம்மா எழுச்சி உரையாற்றினார்.

Night
Day