ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை வளாகத்திலேயே கழிவுகளை பிரித்து அகற்றும் துப்புரவு பணியாளர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை பிரித்து கொட்டும் அவலம் அரங்கேறியுள்ளது. ஸ்ரீவைகுண்டம் துப்புரவு பணியாளர்கள், வாகனத்தில் சேகரிக்கப்பட்ட குப்பைகளுடன் அரசு மருத்துவமனைக்கு வந்து மருத்துவக் கழிவுகளை அள்ளிச் செல்கின்றனர். அப்போது, மூட்டையில் உள்ள மருத்துவக்‍ கழிவுகளை அங்கேயே பிரித்து வாகனத்தில் கொட்டுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த குப்பைகள் அனைத்தும் தாமிரபரணி ஆற்றங்கரையில் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்‍கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

Night
Day