ஹிப்பாப் தமிழா ஆதியை ரோகித் சர்மா என நினைத்து புகைப்படம் எடுத்த நபர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா என நினைத்து தன்னிடம் ஒருவர் புகைப்படம் எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப்பாப் தமிழா ஆதி பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், விமான நிலையத்திற்கு தான் சென்ற போது தன்னுடன் சிலர் புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும், அதனை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த ஒருவர், தனது அருகே வந்து போட்டோ புகைப்படம் எடுத்ததாவும் தெரிவித்துள்ளார். அப்போது, அந்த நபர் உலகக்கோப்பையை ஜெயித்துக் கொடுத்ததற்கு நன்றி என்று தன்னிடம் தெரிவித்ததால் திகைத்து போனதாகவும், தான் ரோகித் சர்மா இல்லை - இசையமைப்பாளர் என அவரிடம் தெரிவித்தாகவும் ஆதி கூறியுள்ளார். தற்போது, அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

varient
Night
Day