10 வயது சிறுமியின் கழுத்தை அறுத்த விவகாரம் - போக்சோ வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என மனு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கல் அருகே 10 வயது சிறுமியின் கழுத்தை அறுத்த நபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டுள்ளது. திருச்செங்கோடு அருகே கடந்த 29ம் தேதி 10 வயது சிறுமி தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அப்பகுதியை சேர்ந்த ஐடி ஊழியர் செந்தில்குமார், சிறுமியை கத்தியால் வெட்டினார். இதனையடுத்து குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு தடுக்க வந்த தங்கராசு, முத்துவேல் ஆகியோரையும் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில், படுகாயம் அடைந்த சிறுமி உட்பட 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், கைது செய்யபட்டுள்ள செந்தில்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என உறவினர்கள் மனு அளித்துள்ளனர். 

Night
Day