100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.319-ஆக அதிகரிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் 319 ரூபாயாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

கடந்த 2006-ம் ஆண்டு கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் 100 நாள் வேலை திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் ஏராளமானோர் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள். இந்நிலையில் இந்த திட்டத்திற்கான தினசரி ஊதியத்தை உயர்த்தி அரசாணை வெளியிட்டப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் தினசரி வழங்கப்படும் ஊதியம் 294 ரூபாயில் இருந்து 319 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

Night
Day