12-ம் தேதி முதல் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க கோரி வரும் 12ம் தேதி முதல் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் அறிவித்துள்ளனர். திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் வரும் 12ம் தேதி முதல் தொடர் போராட்டம் அறிவித்துள்ளனர். கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாத்திற்கு பின் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் அதற்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வலியுறுத்தி 12 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். கடந்த முறை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட போது கோரிக்கையை பரிசீலிப்பதாக கூறி போராட்டத்தை வாபஸ் பெற வைத்து இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Night
Day