2வது நாளாக நீதிமன்றத்தில் ஆஜராகிய நடிகர் விஷால்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக நடிகர் விஷால் நேரில் ஆஜராகினார். சினிமா பைனான்சியர் அன்புசெழியனிடம் நடிகர் விஷால் பெற்ற கடனை லைகா நிறுவனம் திருப்பி செலுத்திய நிலையில், இது தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்ததை மீறி நடிகர் விஷால் செயல்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணைக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜராகிய நடிகர் விஷால், நேற்று மீண்டும் ஆஜராகினார். இந்த இரண்டு நாள் விசாரணையில் 150க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு நடிகர் விஷால் பதிலளித்துள்ளார்.

Night
Day