2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக நேற்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தண்ணீரின் அளவு குறையாமல் அருவியில் நீர் தொடர்ந்து ஆர்ப்பரித்து கொட்டி வருவதால், குற்றால அருவிகளில் இரண்டாவது நாளாக இன்றும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.  

Night
Day