3 நாட்களுக்குப்பின் திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் 3 நாட்களுக்கு பின் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கனமழையால், அணைக்களுக்கு நீர்வரத்து அதிகரித்ததால், பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால், திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில், நீர்வரத்து சீரானதையடுத்து குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  

Night
Day