3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரையில் மதுபோதையில் இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 3பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்காக சிவகங்கையை சேர்ந்த விக்னேஷ் தனது நண்பர்களுடன் வந்திருந்தார். அப்போது கேகேநகர் சுந்தரம் பார்க் பகுதியில் மது அருந்தும் போது விக்னேஷ்க்கும் மதுரை ஆண்டாள்புரம் பகுதியை சேர்ந்த  சுரேந்தர் என்பவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதில் சுரேந்திரன் நண்பர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த விக்னேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சுரேந்தர், முத்துக்குமார், முத்துகிருஷ்ணன் ஆகிய மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையும், கௌதம் வினோத்குமார், காளியப்பன் ஆகிய மூன்று பேருக்கும் ஒரு வருட சிறை  தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். 

Night
Day