4 மாவட்டங்களுக்கு இந்திய கடல்சார் தகவல் மையம் கள்ளக்கடல் எச்சரிக்கை!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இந்திய கடல்சார் தகவல் மையம் கள்ளக்கடல் எச்சரிக்கை விடுத்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கள்ளக்கடல் நிகழ்வுக்கான எச்சரிக்கையை இந்திய கடல்சார் தகவல் மையம் விடுத்துள்ளது. கன்னியாகுமரியில் கடல் அலை 2 புள்ளி 3 மீட்டர் முதல் 2 புள்ளி 6 மீட்டர் வரையும், ராமநாதபுரத்தில் 2 புள்ளி 7 மீட்டர் முதல் 3 மீட்டர் வரையும், நெல்லை மற்றும் தூத்துக்குடியில் 2 புள்ளி 4 மீட்டர் முதல் 2 புள்ளி 7 மீட்டர் வரையும் கடல் அலை எழும்பக்கூடும் என தெரிவித்துள்ளது. கடந்த மாதம் இதேபோல் கள்ளக்கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட போது, கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் உயிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

varient
Night
Day