4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

எழுத்தின் அளவு: அ+ அ-

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், நாளை முதல் 17ம் தேதி வரை பல்வேறு பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாளை மறுதினம் சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாளை முதல் 18ம் தேதி வரை ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day