40 வயதுக்‍கு மேற்பட்டோருக்‍கு மருத்துவ சான்று பெற்ற பிறகே ஓட்டுநர் உரிமம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்திய மோட்டார் வாகன விதி எண் 5-ன் படி 40 வயதிற்கும் மேற்பட்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெற்ற பின்னரே புதிய ஓட்டுநர் உரிமம் பெறவோ அல்லது பழைய ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கவோ இயலும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. போலி மருத்துவ சான்றிதழ்களை தடுக்கும் விதமாக இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக நாளை காலை 11.00 மணியளவில், மாநிலம் முழுவதிலுமுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மூலம் ஒரு செயல்முறை விளக்கம் காண்பிக்கப்படும் என்றும் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் அறிவித்துள்ளார்.

Night
Day