6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

போக்குவரத்து தொழிற்சங்களுடன் நாளை மூன்றாம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 28 சங்கங்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் கடந்த 9-ம் தேதி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஏற்கனவே நடத்தப்பட்ட பேச்சு வார்த்தை தோல்வியடைந்த நிலையில், நாளை சென்னை தேனாம்பேட்டையில் மூன்றாம் கட்ட முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தப்படவுள்ளது.

Night
Day