7 மாநிலங்களில் 13 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

7 மாநிலங்களில் உள்ள 13 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று காலை 7 மணிக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இதேபோல், மேற்குவங்கத்தில் உள்ள ராய்கஞ்ச், ரனாகாட் தக்சின், பாக்தா மற்றும் மணிக்தலா ஆகிய 4 தொகுதிகள், மத்தியப்பிரதேசத்தில் உள்ள அமர்வாரா, பீகாரில் உள்ள ரூபாலி, உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் மற்றும் மங்களூர் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேலும், பஞ்சாபில் உள்ள ஜலந்தர் மேற்கு, இமாசலப்பிரதேசத்தில் உள்ள டேஹ்ரா, ஹமிர்பூர் மற்றும் நலகர் ஆகிய தொகுதிகளிலும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 13 தொகுதி இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

varient
Night
Day