DRUG சிண்டிகேட்டில் தமிழகம் உள்ளது - ஆளுநர்

எழுத்தின் அளவு: அ+ அ-

பாகிஸ்தான்,  அஃப்கனிஸ்தானிலிருந்து போதை பொருள் கடத்தும் கும்பலின் சிண்டிகேட்டில் தமிழகமும் உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறித்துவ கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசியபோது, போதைப் பொருட்கள் தனி மனிதனை சீரழிப்பதோடு, அவனது குடும்பத்துக்‍கும், நாட்டுக்‍கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக குறிப்பிட்டார். பாகிஸ்தான், அஃப்கனிஸ்தான் நாடுகளிலிருந்து டன் கணக்கில் கடத்தப்படும் போதை பொருட்கள் தமிழகம், கேரளா கடலோர பகுதிகளில் பறிமுதல் செய்யப்படுவதாக ஆளுநர் தெரிவித்தார். ஆளுநர் முன்னிலையில் மாணவிகள் போதைப் பொருட்கள் தடுப்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். 

Night
Day