MyV3 Ads நிறுவனம் மீது புகார் அளித்தவர்களிடம் காவல்துறை விசாரணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்ட ஆட்சியரிடம் MyV3 Ads நிறுவனம் மீது புகார் அளித்த பாதிக்கப்பட்டவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். MyV3 Ads நிறுவனம் வேறு ஒரு பெயரில் செயல்பட்டு கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியரிடம் கடந்த திங்களன்று புகார் அளித்திருந்தனர். இதனையடுத்து, கோவை மாநகர குறறப்பரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக வந்த MyV3 Ads நிறுவனர் சக்தி ஆனந்திடம் மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த நிறுவனம் மீது புகார் அளித்தவர்களை அழைத்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Night
Day