ஜெயா பிளஸ் செய்தி எதிரொலி - வடமாநில நோயாளிக்கு மீண்டும் சிகிச்சை

எழுத்தின் அளவு: அ+ அ-

ஜெயா பிளஸ் செய்தி எதிரொலியாக திருச்சி அரசு மருத்துவமனையிலிருந்து சாலையில் வீசப்பட்ட வடமாநில நோயாளியை மீண்டும் உள் நோயாளியாக அனுமதித்து மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சை அளித்து வருகிறது. திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வட மாநிலத்தவர் மீது துர்நாற்றம் வீசுவதாகக்கூறி அவரை மருத்துவமனை பணியாளர்கள் மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே சாலையில் வீசிச்சென்றனர். இந்த சம்பவம் ஜெயா பிளஸ் செய்தியில் ஒளிபரப்பப்பட்டது. இந்நிலையில் உடனடியாக மருத்துவமனை நிர்வாகம், பேட்டரி கார் மூலம் பாதிக்கப்பட்ட வட  மாநிலத்தைச் சேர்ந்த அர்ஜுன் என்பவரை மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Night
Day