ஸ்கேன் மையத்தில் சிக்கித்தவித்த மூதாட்டி - நவீன தொழில்நுட்ப உதவியுடன் இருவரையும் மீட்ட தீயணைப்பு வீரர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசியில் ஸ்கேன் மையத்தில் சிக்கி கொண்ட இருவரை தீயணைப்புத் துறையினர் நவீன தொழில்நுட்ப உதவியுடன் மீட்டனர்.


தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் தனியார் ஸ்கேன் மையத்தில் வக்சலா என்ற 80 வயது மூதாட்டி ஸ்கேன் எடுத்துக் கொண்டிருந்தபோது, அறையின் கதவு லாக் ஆனது. இதனால் மூதாட்டி வக்சலா மற்றும் அவருடன் இருந்த செவிலியர் இருவரும் வெளியே வர முடியாமல் மிகுந்த சிரமம் அடைந்தனர். தொடர்ந்து, அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தென்காசி தீயணைப்பு துறையினர் அறையின் லாக்கை நவீன தொழில்நுட்ப உதவியுடன் உடைத்து அறையில் இருந்த மூதாட்டி மற்றும் செவிலியரை மீட்டனர்.

Night
Day