அரியலூர்: மாசி மகத்தை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே சிரியந்தூர் சிவகாமி அம்மாள் சமேத புறவரி ஈஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. நடு மாட்டு வண்டி, பூஞ்சிட்டு மாட்டு வண்டி, தேன்சிட்டு மாட்டு வண்டி என மூன்று பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. இதில், நடு மாட்டு வண்டியில் 17 மாட்டு வண்டிகளும், பூஞ்சிட்டு மாட்டு வண்டிகளில் 48 மாட்டு வண்டிகளும், தேன்சிட்டு மாட்டு வண்டிகளில் 38 மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன. நடு மாட்டுவண்டி பந்தயத்தில் கலந்து கொண்ட மாட்டு வண்டி ஒன்று சாரதி கீழே விழுந்ததும் எங்கு செல்வது என்று தெரியாமல் பார்வையாளர் கூட்டத்தில் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

Night
Day