இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி: ஜடேஜா, கே.எல்.ராகுல் விலகல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஜடேஜா, கே.எல்.ராகுல் விலகியுள்ளனர். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டியில், 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 2ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரவீந்திர ஜடேஜா, கே.எல் ராகுல் ஆகியோர் காயம் காரணமாக 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். அவர்களுக்கு பதிலாக சர்ஃபராஸ் கான் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சௌரப் குமார், ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

Night
Day