இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் தொடரில் வலுவான நிலையில் இந்திய அணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் தொடரில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.

ராஜ்கோட் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. முதல் நாளில் கேப்டன் ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சதம் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். அறிமுக வீரராக களமிறங்கிய சர்ஃபராஸ் கான் அரைசதம் அடித்து அசத்தினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. உணவு இடைவேளை வரை இந்திய அணி 7 விக்கெட் இழ்ப்புக்கு 388 ரன்கள் குவித்து வலுவான நிலையில் விளையாடி வருகிறது. 

Night
Day