இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முக்கிய இந்திய வீரர்கள் இடம்பெறாதது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் வரும் 23-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பணிச்சுமையை கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ விளக்கமளித்துள்ளது. மேலும் காயத்திலிருந்து மீண்ட கே.எல்.ராகுலின் உடற்தகுதியை பொறுத்தே பங்கேற்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day